ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணன், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ மற்றும் அதிமுக புறநகர் மேற்கு தொகுதி பொறுப்பாளர் ஏ.கே. செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ கே.எஸ். தென்னரசு ஆகியோர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
மனுவில் அவர்கள் தெரிவித்ததாவது:
“வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. வீடு வீடாகச் சென்று வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் பெயர் சேர்க்கும் பணியை மேற்கொள்வதை நாங்கள் பாராட்டுகிறோம். எங்களது கட்சியின் பொதுச்செயலாளர் உத்தரவின்படி அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் பணி சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். வாக்குச்சாவடி அதிகாரிகள் செல்லும் போது எங்கள் கட்சியினர் உடன் சென்று தேவையான உதவிகளை செய்ய உள்ளனர்.”
மேலும் அவர்கள் கூறியதாவது:
“வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் எங்கள் பூத் லெவல் முகவர்கள் மக்கள் ஆவணங்களை பூர்த்தி செய்ய உதவுகின்றனர். இடம் மாறியவர்கள் தேவையான ஆவணங்களை அளித்தால் அவர்களின் பெயர்கள் சேர்க்கப்படும். திமுக இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது, ஏனெனில் கள்ள ஓட்டுப் போட முடியாமல் போகும் என்பதே அதற்குக் காரணம். இனி அத்தகைய முறைகேடுகள் நடைபெறாது.”
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வியாழன், 6 நவம்பர், 2025
Home
செய்திகள்
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஆதரித்து அதிமுக மனு
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஆதரித்து அதிமுக மனு
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக