வேலை தேடுகிறவர்களுக்கு முருக வழிபாடு ஏன் நம்பிக்கை தரும் ஆயுதம்? - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

திங்கள், 2 ஜூன், 2025

வேலை தேடுகிறவர்களுக்கு முருக வழிபாடு ஏன் நம்பிக்கை தரும் ஆயுதம்?

காலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் முருகர் திருவுருவப்படத்திற்கு ஒரு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். முருகருக்கு இரண்டு கற்கண்டு, பேரிச்சம்பழம், வாழைப்பழம் ஏதாவது ஒரு பிரசாதம் வைத்து விட்டு இரண்டு கைகளை கூப்பி முருகரை வணங்கி இந்த மந்திரத்தை ராஜராஜஸகோத் பூதம்! ராஜீவாயத லோசனம்! ரதீசகோடி ஸௌந்தர்யம்! தேஹிமே விபுலாம் ச்ரியம்!! 108 முறை சொல்லிவிட்டு, உங்களுடைய அன்றாட வேலையை துவங்குங்கள். பிரார்த்தனையில் ஒரு துளி சந்தேகம் கூட இருக்கக் கூடாது. முருகா உன்னை நம்பிவிட்டேன். நீ தான் எனக்கு இந்த பிரச்சனையை தீர்த்து தர வேண்டும். கைநிறைய சம்பளத்தோடு ஒரு வேலையை வாங்கி கொடுத்து விடு. என் அப்பனே, என்று உரிமையோடு கேட்டு போராடுங்கள். வரக்கூடிய ஜூன் மாதம் 9ஆம் தேதி, வைகாசி விசாகம் வரவிருக்கிறது. வைகாசி விசாகம் வர கிட்டத்தட்ட ஒரு வாரம் இருக்கிறது. இந்த ஒரு வாரத்தில் நீங்கள் முருகரை நினைத்து வேண்டி, பின் சொல்ல கூடிய இந்த மந்திரத்தை தினம் தோறும் உச்சரித்து வர, உங்களுக்கு வேலையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீரும். வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு கைநிறைய சம்பளத்தோடு வேலை கிடைக்கும். ஆசைப்பட்ட வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் நினைத்தபடி நல்ல வேலை கிடைக்கும். ப்ரமோஷனுகாக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல பிரமோஷன் கிடைக்கும். இடம் மாற்றத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். அரசாங்க வேலைக்காக முயற்சி செய்து தேர்வு எழுதி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் அரசாங்க வேலை கிடைக்கும். வேலையில் உங்களுக்கு எந்த பிரச்சனை இருந்தாலும் சரி, அது சரியாக வேண்டும் என்று நாளைய தினம், செவ்வாய்க்கிழமை முருகருக்கு உகந்த கிழமை அல்லவா. நாளிலிருந்து இந்த வழிபாட்டை துவங்குங்கள். நாளையிலிருந்து இந்த மந்திரத்தை சொல்லுங்கள். வைகாசி விசாகத்தன்று முருகனை சென்று பார்க்கும் போது கையில் நல்ல வேலையோடு தான் செல்வீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad