தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முடிந்து விடுமுறைகள் விடப்பட்டு 2025 -2026 ஆம் கல்வியாண்டிற்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன திறக்கப்பட்ட முதல் நாளிலேயே அனைத்து மாணவ மாணவிகளுக்கும் விலையில்லா நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் பவானி பூக்கடை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சுவாமி விவேகானந்தா அரசு நிதி உதவி பெறும் துவக்கப் பள்ளியில் பள்ளியில் படிக்க வருகின்ற குழந்தைகளுக்கு மேளதாளங்கள் முழங்க பூக்கள் சந்தனம் குங்குமம் கொடுத்து பன்னீர் தெளித்து சிறப்பான முறையில் மாணவர்களை ஆசிரியைகள் வரவேற்றனர் அதைத் தொடர்ந்து நடைபெற்ற விலையில்லா அரசு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பவானி நகர் மன்ற தலைவர் சிந்துரி இளங்கோவன் அவர்கள் நகர மன்ற துணைத் தலைவர் மணி ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் பள்ளிச் சீருடை ஸ்கூல் பேக் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் சரவணன்,துரைராஜா, பவித்ரா கார்த்தி கேயன், கவிதா உதயசூரியன், வட்டார கல்வி அலுவலர்கள் திரு. குமார் திருமதி. வனிதா ராணி மற்றும் ஸ்ரீ சுவாமி விவேகானந்தா அரசு நிதி உதவி பெறும் பள்ளியின் செயலர் தியாகராஜன் பள்ளி குழு தலைவர் கதிர்வேல் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆசிரியர் செந்தில்குமார் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் என ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தனர்
திங்கள், 2 ஜூன், 2025
நிதி உதவி பெறும் பள்ளிக்கு விலையில்லா பாட புத்தங்கள் வழங்கப்பட்டன
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக