விலையில்லா பாட புத்தங்களை முன்னால் அமைச்சர் கருப்பண்ணன் வழங்கினார் - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

திங்கள், 2 ஜூன், 2025

விலையில்லா பாட புத்தங்களை முன்னால் அமைச்சர் கருப்பண்ணன் வழங்கினார்

தமிழ்நாடு அரசு கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கும் என அறிவித்திருந்தது அதன் அடிப்படையில் இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்ட நிலையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் பாட புத்தகங்கள் சீருடைகள் பேக் இவை அனைத்தும் உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது அதன் அடிப்படையில் பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே அனைத்து மாணவ மாணவிகளுக்கும் அனைத்து பொருள்களும் கொடுப்பதற்கு தயார் செய்திருந்தனர் அதன் அடிப்படையில் இன்று பள்ளிகள் திறந்த உடனே மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் பாட புத்தகங்கள் பேக் உள்ளிட்டவைகளை வழங்கப்பட்டது இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளியில் படிக்கின்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் நோட்டு புத்தகம் பாட புத்தகம் இவை அனைத்தும் வழங்கப்பட்டது.
அதேபோல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளியில் படிக்கின்ற அனைத்து மாணவிகளுக்கும் பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன அதேபோல்
கவுந்தப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு புத்தகம் ஸ்கூல் பேக் சீருடைகள் உள்ளிட்டவற்றை வழங்கினார்
முன்னாள் அமைச்சரும் தற்போதைய பவானி சட்டமன்ற உறுப்பினருமான கே சி கருப்பண்ணன் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கவுந்தப்பாடி பஞ்சாயத்து தலைவர் பாபா தங்கமணி, அண்ணா தொழிற்சங்க ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டத்தின் செயலாளர் ஜான் பவானி நகர அதிமுக செயலாளர் சீனிவாசன் நகர் மன்ற உறுப்பினர் பவித்ரா கார்த்தி ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டத்தின் பாசறை மாவட்ட செயலாளர் பிரகாஷ் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad