தூத்துக்குடி நகர மையத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சங்கரராமேஸ்வரர்–பாகம்பிரியாள் அம்பாள் திருக்கோவில் வளாகத்தில் நடைபெற்று வரும் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா இரண்டாம் நாளை எட்டியுள்ளது. நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில், அன்னை பாகம்பிரியாள் தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார்.
இன்று (வியாழக்கிழமை) திருவிழாவின் இரண்டாம் நாளாக, அன்னை பாகம்பிரியாள் கிளி வாகனத்தில் அலங்கரித்து வீதி உலா வருகை தந்தார். பக்தர்கள் தங்களது வீடுகளின் முன்பாக தீபம் ஏற்றி மலர் தூவி சுவாமி–அம்மன் தரிசனம் செய்தனர்.
விழா தொடர்ச்சியாக நவம்பர் 13ஆம் தேதி காலை 10 மணிக்கு தேரோட்டம், மேலும் நவம்பர் 14ஆம் தேதி இரவு 7 மணிக்கு பூப்பல்லக்கில் அன்னை பாகம்பிரியாள் சிவபூஜை அலங்காரத்தில் வீதி உலா நடைபெற உள்ளது.
முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம், நவம்பர் 15ஆம் தேதி சனிக்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு தினமும் இன்னிசை கச்சேரிகள், நாட்டிய நிகழ்ச்சிகள், பக்தி பாடல்கள் நடைபெற்று வருகின்றன. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.
வியாழன், 6 நவம்பர், 2025
Home
ஆன்மிகம்
தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா — கிளி வாகனத்தில் அன்னை பாகம்பிரியாள் வீதி உலா
தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா — கிளி வாகனத்தில் அன்னை பாகம்பிரியாள் வீதி உலா
Tags
# ஆன்மிகம்
About bmstelevision
ஆன்மிகம்
லேபிள்கள்:
ஆன்மிகம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக