சைக்கோ ஆதவ அர்ஜுனாவை கைது செய்ய வேண்டும் – தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு வலியுறுத்தல் - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

வியாழன், 6 நவம்பர், 2025

சைக்கோ ஆதவ அர்ஜுனாவை கைது செய்ய வேண்டும் – தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு வலியுறுத்தல்

தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு மாநில தலைவர் நாகா ஆர். அரவிந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “வரலாறு தெரியாமல் உளறி வரும் சைக்கோ ஆதவ அர்ஜுனாவை உடனடியாக கைது செய்ய வேண்டும். ஒரு முன்னாள் அமைச்சர் மற்றும் மக்கள் சேவையில் ஈடுபட்டு வருபவரை ‘ரவுடி’ என்று அவதூறு பேசுவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
மேலும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் இளைஞர்களின் எழுச்சி நாயகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை தொடர்ந்து இழிவாக பேசி வருவது சட்டத்திற்குப் புறம்பானது. இது சமூக அமைதிக்கும் அரசியல் ஒற்றுமைக்கும் கேடு விளைவிக்கும் வகையில் உள்ளது. அதனால், சைக்கோ ஆதவ அர்ஜுனாவை சட்டப்படி உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad