திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 102 வது பிறந்தநாள் விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகின்றது இதன் ஒரு பகுதியாக ஈரோடு தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சி துறை மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சரும் ஈரோடு தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளருமான சு முத்துசாமி அவர்கள் தலைமையில் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருஉருவ சிலைக்கும் மணல்மேடு பகுதியில் உள்ள தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் அலுவலகத்தில் உள்ள டாக்டர் கலைஞர் அவர்களின் திருஉருவப்படத்திற்கும் முனிசிபல் காலனி பகுதியில் அமைந்துள்ள டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருஉருவ சிலைக்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி சி சந்திரகுமார் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
திங்கள், 2 ஜூன், 2025
தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் பிறந்த நாள் விழா
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக