தூத்துக்குடியில் தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் பாதுகாப்புக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

புதன், 19 நவம்பர், 2025

தூத்துக்குடியில் தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் பாதுகாப்புக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதைக் கண்டித்து, அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் மாவட்ட கட்டமைப்பு ஏற்பாடு செய்தது. மாநகர செயலாளர் மற்றும் மாநகர மன்ற உறுப்பினர் ஜி. தனலெட்சுமி ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
மாநிலக்குழு உறுப்பினர் டாக்டர் த. அறம் கண்டன் உரையாற்றியபோது, சமூக நீதி, மனிதஉரிமை பாதுகாப்பு மற்றும் அரசின் பொறுப்புணர்வு குறித்து வலியுறுத்தினார். தொடர்ந்து மாவட்ட செயலாளர் பி. கரும்பன், மாவட்ட துணைச் செயலாளர்கள் பாலமுருகன், பாபு, மாநிலக்குழு உறுப்பினர் எஸ். பி. ஞானசேகர் உள்ளிட்ட பலரும் பேசினர். கோவில்பட்டி நகர செயலாளர் செந்தில் ஆறுமுகம், எட்டயபுரம் நகரச் செயலாளர் சோலையப்பன், எட்டயபுரம் தாலுகா செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட கட்சியின் பல பிரமுகர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad