
இந்தியாவின் மின்சார இருசக்கர வாகனத் துறையில் புதிய அத்தியாயத்தை திறந்து வைக்கும் வகையில், மேட்டர் எலக்ட்ரிக் மோட்டார் நிறுவனம் வடிவமைத்து தயாரித்த நாட்டின் முதல் கியர்டு எலக்ட்ரிக் மோட்டார் பைக் “AERA 5000+” சென்னையில் அறிமுகமானது. நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான அருண் பிரதாப் சிங் சிறப்பு விழாவில் இந்த மின்னணு மோட்டார் சைக்கிளை வெளியிட்டு, அதிகாரப்பூர்வ விற்பனையைத் துவக்கி வைத்தார்.class="separator" style="clear: both;">
இந்தப் பைக் முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. பாரம்பரிய எரிபொருள் பைக்குகளில் காணப்படும் கியர் முறைமை, மின்சார மோட்டாரில் இணைக்கப்பட்டிருப்பது இந்த மாடலின் பிரத்யேக சிறப்பம்சமாகும். இதன் மூலம் ஓட்டுநருக்கு அதிக கட்டுப்பாடு, சிறந்த பிக்-அப், வேக மாற்றத்தில் மிருதுவான அனுபவம் ஆகியவை கிடைக்கின்றன என நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஒரே சார்ஜில் நீண்ட தூரம் பயணிக்கக்கூடிய திறன், மேம்பட்ட பேட்டரி பாதுகாப்பு அமைப்பு, ஸ்மார்ட் கனெக்டிவிட்டி வசதிகள் மற்றும் இந்தியப் பாதைகளுக்கு ஏற்ற வலுவான சாஸ்சி போன்ற அம்சங்களும் இதில் அடங்கும். மின்சார வாகனத் துறையில் நுட்பமான புதுமை தேவைப்படும் இந்த நேரத்தில், கியருடன் கூடிய எலக்ட்ரிக் பைக் இந்திய சந்தையில் புதிய மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அறிமுக நிகழ்வில் பேசிய அருண் பிரதாப் சிங், “இந்தியா உலகின் மிக வேகமாக வளரும் மின்சார வாகன சந்தை. AERA 5000+ இந்திய பொறியியல் திறனின் அடையாளமாகும்” என்று தெரிவித்தார்.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக