சமுதாய ஒற்றுமை திருவிழா - 2026 சட்டமன்ற தேர்தலுக்கான புதிய வழிகாட்டல் - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

புதன், 4 ஜூன், 2025

சமுதாய ஒற்றுமை திருவிழா - 2026 சட்டமன்ற தேர்தலுக்கான புதிய வழிகாட்டல்

சமுதாய ஒற்றுமை திருவிழா - 2026 சட்டமன்ற தேர்தலுக்கான புதிய வழிகாட்டல் தமிழ்நாடு அனைத்து சமுதாய கூட்டம் சார்பில், "சமுதாய ஒற்றுமை திருவிழா" எதிர்வரும் 14.06.2025 சனிக்கிழமை, மாலை 6:00 மணி அளவில் சென்னை வில்லிவாக்கம் ஸ்ரீ மினி காமகோடி திருமண மாளிகையில் நடைபெற உள்ளது. இத்திருவிழாவை முன்னிட்டு, கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் முனுசாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ் சமூகங்கள் ஒன்றுபட்டு ஒருமித்த குரலாக ஒற்றுமையை வெளிப்படுத்தும் இந்த திருவிழா, பிரதிநிதித்துவம் இல்லாத மற்றும் குரலற்ற சமுதாயங்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில், இக்கூட்டமைப்புகள் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு அரசியல் உரிமைகளை பெறும் வகையில் போட்டியிடும் இந்த நிகழ்வு, தமிழகத்தை தமிழர்கள் ஆளவேண்டும் என்ற லட்சியத்துடன் முன்னேற்கப்படுகிறது. எனவே, அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து, ஒற்றுமையை வெளிப்படுத்தும் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு, ஒன்றுபட்ட குரலாக எழுச்சியோடு பங்கேற்குமாறு அனைவரையும் வரவேற்கின்றோம்.” இந்நிகழ்வின் ஏற்பாட்டில்: கொங்குநாடு வேட்டுவ கவுண்டர்கள் முன்னேற்ற சங்கம் தமிழ்நாடு அனைத்து சமுதாய கூட்டம் பங்குபெறுகின்றன. இந்நிகழ்வில் சமூக நீதி, சம உரிமை மற்றும் தமிழ் தேசிய அரசியல் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளன. வருக! வருக! ஒற்றுமையுடன் எழுவோம்! இணைப்படுத்தியவர்: முனுசாமி கவுண்டர், பின் பொருளாளர், தமிழ்நாடு அனைத்து சமுதாய கூட்டம் நிறுவனர், கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி 7904362465, 9443725367

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad