கேரளாவின் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில் மாற்றம்: சோறூட்டல் நிகழ்வு பற்றிய புதிய அறிவிப்பு - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

செவ்வாய், 27 மே, 2025

கேரளாவின் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில் மாற்றம்: சோறூட்டல் நிகழ்வு பற்றிய புதிய அறிவிப்பு

குழந்தை கிருஷ்ணராக அருள் பாலிக்கும் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் குழந்தைகளுக்கு முதல் முதலாக சோறு ஊட்டுவது, உடல் ஆரோக்கியம் மேம்பட நோய் தீர வேண்டுதல்களை நிறைவேற்ற எடைக்கு எடை துலாபாரம் கொடுப்பது உள்ளிட்ட பல விசேஷங்கள் உள்ளன.குழந்தைகளுக்கு முதல் முதலாக சோறு ஊட்டும் பொழுது குழந்தைகள் ஆரோக்கியமாக உடல் வலுவாக நோய் நொடியின்றி, வளர வேண்டும் என்ற வேண்டுதலுடன் இந்த நிகழ்வு நடைபெறும். கேரளாவில் உலக பிரசித்தி பெற்ற பட்டியலில், சபரிமலை ஐயப்ப சுவாமி கோவில், திருப்பரையாறு ராமர் கோவில், பகவதி அம்மன் கோவில், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில், குருவாயூர் கிருஷ்ணன் கோவில் உள்ளிட்டவை அடங்கும். பூலோக வைகுண்டம் என்று மகாவிஷ்ணு அருள்பாலிக்கும் ஒரு சில ஆலயங்களை குறிப்பிடுவோம். ஆந்திர மாநிலத்தில் திருப்பதி தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம் போலவே, நான்கு கரங்களுடன் மகாவிஷ்ணு கிருஷ்ணனாக அருள்பாளிக்கும் கேரளா திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூர் கோவில் பூலோக வைகுண்டமாக கருதப்படுகிறது.
கேரளா கோவில்களின் அமைப்பு மட்டுமல்லாமல் வழிபாட்டு முறைகளும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். தென் தமிழகத்தில் மற்றும் கேரளாவை ஒட்டி உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் பகுதிகளிலும் ஆண்கள் கோவிலுக்குள் செல்லும் பொழுது மேல் சட்டை அணியாமல் செல்ல வேண்டும். உலகப் பிரசித்தி பெற்ற அறுபடை வீடுகளில் ஒன்றான கடற்கரையில் அமைந்திருக்கும் திருச்செந்தூர் கோவிலிலும் ஆண்கள் மேல் சட்டை அணியாமல் தான் கோவிலுக்குள் சென்று முருகப்பெருமானை தரிசிக்க வேண்டும் என்ற வழக்கம் உள்ளது. குருவாயூர் கோவிலிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad