திருப்பூர் முத்தனம்பாளையம் அருள்மிகு அங்காளம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

வெள்ளி, 6 ஜூன், 2025

திருப்பூர் முத்தனம்பாளையம் அருள்மிகு அங்காளம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

திருப்பூர் அருகேமுத்தனம்பாளையம் அருள்மிகு அங்காளம்மன் கோவிலில் ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
50,000 - க்கும் மேற்பட்ட பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பு.சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மூலவர்,பரிவார மூல மூர்த்திகள் விமானம், ராஜகோபுரம் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.மூலவருக்கு வலது பக்கம் சுயம்புவாக புற்று அமைந்திருப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும் திருப்பூர் அருகே முத்தனம்பாளையத்தில் உள்ள அங்காளம்மன் திருக்கோவில் 1000 வருடங்களுக்கு முன் பழமையானது.பாண்டியர்களால் கட்டப்பட்டுள்ளது, அன்னை பார்வதி இத் திருக்கோவிலில் அங்காளம்மன் ஆக அருட்காட்சி தருகிறாள். இத்தலத்தில் மூலஸ்தானத்தில் மூலவருக்கு வலது பக்கம் சுயம்புவாக புற்று அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும்,இத்திருக்கோவிலில்ஸ்ரீ அங்காளம்மன் மூல மூர்த்தியாகவும், பரிவார தெய்வங்களாக ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ கருப்பண சுவாமி, ஸ்ரீ பாவாடைராயன், ஸ்ரீ காத்தவராயன் ,ஸ்ரீ இருளப்பன், ஸ்ரீ அகோர வீரபத்ர சுவாமி, ஸ்ரீ பேமசரி, ஸ்ரீ நாகர், ஸ்ரீ புரவை அம்மன், ஸ்ரீ கவுண்டச்சி அம்மன், ஸ்ரீ உடையாரம்மன், ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி ஆகிய மூர்த்திகள் இங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.இத்திருக்கோவிலில் மிக முக்கிய நிகழ்வான ஜீர்னோத்தாரண அஷ்ட பந்ததன மகா கும்பாபிஷேக விழா இன்று விமரிசையாக நடைபெற்றது
.இந்த மகா கும்பாபிஷேக விழாவானது கடந்த 1-ம் தேதி விநாயகர் வழிபாடும், மகாலட்சுமி யாகமும், பூர்ணாகுதியும் தீபாராதனையுடன் விழா துவங்கியதுகோவிலின் முன்புறம் யாகசாலைகள் அமைக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது,அம்மனுக்கு பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனை நடைபெற்றன,தொடர்ந்து 2-ம் தேதி காலை 7 மணிக்கு மங்கல இசையும் பஞ்சகாவியமும் சாந்தி ஹோமமும் தீபாராதனையும் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து அன்றுமாலை 4 மணி அளவில் கோவில் வழி அருள்மிகு பெரிய அழகு நாச்சியம்மன் அருள்மிகு சின்ன அம்மன் கோவில் அருகில் இருந்து 2000 பெண்கள் ,பக்தர்கள் பங்கேற்ற முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றன.தொடர்ந்து 3-ம்தேதி அஸ்தரா அபிஷேகமும், அக்னி சந்திரகணம் ,தீர்த்த சந்திரகணமும் நடைபெற்றது,மாலை ஆறு மணிக்கு முதல் காலயாக பூஜையும், நான்காம் தேதி காலை 9 மணிக்கு 2-ம் காலயாக பூஜையும்,மாலை 6:00 மணிக்கு 3 -ம் கால யாக பூஜையும் நடைபெற்றது, ஐந்தாம் தேதி காலை எட்டு முப்பது மணிக்கு நான்காம் காலயாக பூஜை சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன,தொடர்ந்து காலை கோபுர கலசம் வைத்தல் பரிகார தெய்வங்கள் அஷ்டபந்தனம் செய்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது,மாலை 5 மணிக்கு 5-ம் காலயாக பூஜையும் ,இரவு 9 மணிக்கு அஷ்டபந்தனம் (மருந்து சான்றுதல்) நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேக விழா சிவாச்சாரியார்கள் முன்னிலையில் இன்று காலை நான்கு மணிக்கு 6-ம் காலயாக பூஜையுடன் துவங்கியது, காலை 5 மணிக்கு யாத்திரா கடம் புறப்பாடும், காலை ஐந்து முப்பது மணிக்கு அனைத்து மூலவர் அம்மன் விமானம், மூலமூர்த்திகள் விமானம், ஸ்ரீ ராஜகோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இன்று மாலை 6:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா புறப்படுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வருகை தரும் பக்தர்களுக்காகஒரு லட்சம் பேர் உணவருந்தி செல்லக் கூடிய வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த அன்னதான பந்தலில் பக்தர்கள் உணவு வழங்கப்பட்டது
.அதனைத் தொடர்ந்து மண்டல பூஜையானது வருகிற ஏழாம் தேதி முதல் தொடங்கி தொடர்ந்து 48 நாட்கள் நடைபெற உள்ளது,இந்த கும்பாபிஷேக விழாவில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார்,சிரவை ஆதீனம் இராமானந்த குமரகுருபர அடிகளார்,தென்சேரிமலை ஆதீனம் முத்து சிவராமசாமி அடிகளார்,வரன் பாளையம் ஆதீனம் மௌன சிவாச்சல அடிகளார்,திருப்புக் கொளியூர் வாகீசர் மடாலய ஆதீனம் காமாட்சி தாசர் சுவாமிகள்,கோவை காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர ஸ்வாமிகள்,கபிலர்மலை சிவ ஸ்ரீ செல்வ கபில சிவாச்சாரியார்,ஓதுவ மூர்த்திகள் சிவனடியார்கள் ,மற்றும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்
.பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad