நேரு நகர் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

வியாழன், 5 ஜூன், 2025

நேரு நகர் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது

நேரு நகர் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது கோயம்புத்தூர் மாவட்டம் நேரு நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவில், சமீபத்தில் முழுமையாக புனரமைக்கப்பட்டு, அதன் புனர்மாவலிக்கான கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்த புனித நிகழ்வுகள் ஜூன் 2ஆம் தேதி தொடங்கி ஜூன் 5ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வுகள்: ஜூன் 2ஆம் தேதி காலை, சுதர்சன ஹோமம் நடைபெற்றது. பின்னர் மாலை நேரத்தில் வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம் உள்ளிட்ட அனுஷ்டானங்கள் நடைபெற்றன. ஜூன் 3ஆம் தேதி காலை, யாகங்கள் நடைபெற்று, பூர்ணாஹுதி சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நேரு நகர் விநாயகர் கோவிலில் இருந்து ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்வரை முளைப்பாளிகளுடன் ஊர்வலம் நடைபெற்றது.
ஜூன் 4ஆம் தேதி, காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் கோமங்கள் நடைபெற்றன. ஜூன் 5ஆம் தேதி (இன்று) காலை, யாகசாலை பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்றன.
யாகத்திற்கு தேவையான திரவியங்களை கோவில் முக்கியஸ்தர்கள் மேளதாளங்கள் இசைமுறைபடி கொண்டு வந்து, திருக்கோவிலைக் சுற்றி வலம் வந்து யாகசாலைக்கு கொண்டு சென்றனர். பின்னர் பட்டாச்சாரியார்கள் யாகத்தில் பல்வேறு திரவியப்புகள், பழங்கள், காய்கறிகள் மற்றும் புது வஸ்திரங்களை சமர்ப்பித்து பூர்ணாஹுதி நிகழ்த்தினர். அதன் பிறகு கலசங்களுக்கு மகாதீபாராதனை செய்யப்பட்டது. வேதமந்திரங்கள் ஒலிக்க, பூஜிக்கப்பட்ட கலசங்களை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்து, கோபுர உச்சியில் உள்ள கலசத்திற்கு நாமாவளிகள் கூறி, கலச நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
மூலவரான ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாளுக்கும் இணை சம்பிரோஷணம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நிகழ்த்தப்பட்டது.
பக்தர்களின் பங்கேற்பு: இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தீர்த்த பிரசாதம் பெற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad